தாராபுரம் - Dharapuram

தாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா

தாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா

தாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மாரியம்மனுக்கு தீர்த்த கலசங்களை எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டனர். மேலும் பூவோடு எடுத்தல், அலகு குத்துதல், வெண்கலப் பூவோடு என நேர்த்திக் கடனை செலுத்தினர்.  இதன் ஒரு பகுதியாக 19-வது நாளான நேற்று லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் தீர்த்த கலசங்களை எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా