மணச்சநல்லூர் - Manachanallur

பூட்டியிருந்த வீட்டில் ரூ. 35,000 ரொக்கம் திருட்டு

பூட்டியிருந்த வீட்டில் ரூ. 35,000 ரொக்கம் திருட்டு

மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு இருங்கலூர் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் நேற்று(செப்.15) காலை தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். அவர், மதியம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 35 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்பிரமணியன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டில் திருடியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా