ஓட்டப்பிடாரம் - Ottapidaram

மது குடிப்பதை கண்டித்த தந்தை; வாலிபர் தற்கொலை

மது குடிப்பதை கண்டித்த தந்தை; வாலிபர் தற்கொலை

தூத்துக்குடியில் மது குடிப்பதை தந்தை கண்டித்தால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரம், தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் அஜித்குமார் (வயது 22), கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். மது போதைக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அஜித்குமாரை அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా