தொல்.திருமாவளவனை கண்டித்து ஆதி தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
அருந்ததிய சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள மூன்று சதவீகித உள் ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் மாநில அரசுகளின் உரிமைகளை அதிகாரங்களை பறிக்கின்ற வகையிலும் உச்ச நீதிமன்றத்தில் சமூக நீதி தீர்ப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட அருந்ததிய அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை திரும்ப பெற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து ஆதி தமிழர் பேரவை சார்பில் தூத்துக்குடியில் எம்ஜிஆர் பூங்கா எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி