கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

85பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியமும் வழங்கப்படாமல் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட புதியம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் முறையாக வழங்க வேண்டும் மற்றும் ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி