மழை காற்று காரணமாக பெங்களூர் விமானம் மதுரையில் தரை இறக்கம்.

53பார்த்தது
தூத்துக்குடி விமான நிலைய பகுதியில் பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பெங்களூரில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் 3: 30 மணி அளவில் தரையிறங்க வந்த விமானம் மதுரை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு தரைஇரக்கப்பட்டது


தூத்துக்குடி விமான நிலைய பகுதியில் இன்று பிற்பகல் 3: 30 மணி அளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு விமான நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விமானம் இறங்கும் ஓடுதளத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய துவங்கியது இதைத்தொடர்ந்து பிற்பகல் 3: 30 மணிக்கு பெங்களூரூவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்காமல் சிறிது நேரம் வானில் வட்டமடித்தது இதன்பின் காற்று மற்றும் மழை குறையாததால் பெங்களூரு விமானம் மதுரை விமான நிலையத்திற்கு பயணிகளுடன் திருப்பி அனுப்பப்பட்டது பின்னர் மழை காற்று குறைந்த பின்பு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பயணிகளுடன் பெங்களூர் விமானம் வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்தி