குற்றால அருவியில் கட்டுவிரியன் பாம்பு (வீடியோ)

70பார்த்தது
குற்றால அருவியில் தண்ணீரில் அடித்து வரப்பட்ட பாம்பு சுற்றுலா பயணிகள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்றிரவு, கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று அருவியில் இருந்து தண்ணீருடன் சேர்த்து ஆண்கள் குளிக்கும் பகுதியில் விழுந்தது. பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து, தீயணைப்பு துறை அதிகாரிகள் கட்டுவிரியன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நன்றி:Sathiyam News

தொடர்புடைய செய்தி