கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி!

69பார்த்தது
தூத்துக்குடியில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி பேச்சுப் போட்டியை துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட முழுவதும் இருந்து 102 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு என் உயிரிலும் மேலான என்ற தலைப்பில் பேசி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்தி