மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி: எம்பி வழங்கினார்!

63பார்த்தது
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி: எம்பி வழங்கினார்!
தூத்துக்குடியில் 1,439 பேருக்கு ரூ. 11.62 கோடி கடனுதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார். தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் மேளா நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன், வீட்டு அடமானக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன், சிறுவணிகர் கடன், சிறு-குறு கடன் என மொத்தம் 1,439 பேருக்கு ரூ. 11.62 கோடி கடனுதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, வங்கி இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான பொ. நடுக்காட்டுராஜா, பொது மேலாளர் ப. சரவணன், முதன்மை வருவாய் அலுவலர் க. விஜயன், உதவிப் பொது மேலாளர்கள் சீனிவாசன், பூமிசெல்வி, வங்கி மேலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி