திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

தஞ்சாவூர்: அரசுக்குச் சொந்தமான 3 டன் தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்

தஞ்சாவூர்: அரசுக்குச் சொந்தமான 3 டன் தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே குலசேகரநல்லூரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தேக்குமரக்காட்டில் அனுமதியின்றி சிலர் தேக்குமரங்களை வெட்டிக் கடத்துவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமநிர்வாக அலுவலர் ராகுலுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற வி.ஏ.ஓ ராகுல் வெட்டிய தேக்குமரக்கட்டைகளை பறிமுதல் செய்து கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஒப்படைத்தார்.  அவைகளைப் பார்வையிட்ட உதவி ஆட்சியர் ஹிருத்யா எஸ். விஜயன் நடத்திய விசாரணையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்காக குலசேகரநல்லூரில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரின் நிலம் பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசனப் பிரிவு மூலம் கையகப்படுத்தப்பட்டு அந்த இடத்தில் சுமார் 30 தேக்கு மரங்கள் இருந்துள்ளன.  அவற்றை சட்டவிரோதமாக ராஜேந்திரன் என்பவர் வெட்டிக் கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை அறிக்கை தயார் செய்து, நீர்ப்பாசனத் துறையினர் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உதவி ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் கொள்ளிடம் தடுப்பணைப் பிரிவு அதிகாரிகள் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த பந்தநல்லூர் போலீசார் வனத்துறை மூலம் சுமார் 3 டன் எடையுள்ள 207 தேக்கு மரங்களின் பண மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా