திருவடனை - Tiruvadanai

குப்பை இல்லா கடல் குறித்த விழிப்புணர்வு..!

ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தினை முன்னிட்டு எம்‌. எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் குப்பையில்லா கடல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ம் தேதியானது சர்வதேச கடலோர தூய்மை தினமாக அனுசரிக்கப்படுகிறது. தங்கச்சிமடத்தில் இயங்கி வரும் எம்‌. எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சங்குமால் கடற்கரை ப்ளாஸ்டிக் பொருட்களில் இருந்து கடல் மற்றும் மீன்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கடலோரத்தை தூய்மை படுத்தும் பணியானது நடைபெற்றது, காவல் கடற்படை அதிகாரிகள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்