உள்வாங்கிய கடல்: தரைதட்டிய படகுகள்.!

73பார்த்தது
திருப்பாலைக்குடியில் 1 கிமீ தூரம் கடல் உள்வாங்கியதால் 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றது.


ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை கடலோரக் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது.

இதனால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன. மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு வர முடியாமல் அவதி அடைந்தனர்.

காற்றின் சுழற்சி காரணமாக செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை கடல் உள்வாங்குவதும் பின்பு இயல்பு நிலைக்கு திரும்புவதும் அவ்வபோது நடக்கும் நிகழ்வு என மீனவர்கள் கூறுகின்றனர்.


இந்த நிலையில் இன்று திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியதால் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி