கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை: டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

கோவை: டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா(23). இவர் கோவை போத்தனூர் சாரதாமில் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று (அக்.,18) இவர் கடை முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சிவாவிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். அவர் கூச்சல் போட்டதால் ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சிவா போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் பறிக்க முயன்றது போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த நிஷாம்(33) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా