கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை: சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

கோவை: சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

கோவை சரவணம்பட்டி சின்ன வேடம்பட்டி பகுதியில் 2 வீடுகளில் சூதாட்டம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று(செப்.29) போலீசார் அந்த வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட தொப்பம்பட்டி செந்தில் குமார் (41), ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த சதீஷ்குமார் (43), சின்னவேடம்பட்டியை சேர்ந்த தனரா (32), சத்தியமூர்த்தி (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.   அவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 48 ஆயிரம், கார், பைக், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் அங்கு மற்றொரு வீட்டில் சூதாட்டம் ஆடிய 18 பேர் போலீசிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ. 52 ஆயிரத்து 970 பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் பனியன் நிறுவனம், டாஸ்மாக் கடை போன்றவற்றில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் என தெரியவந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా