வேதாரண்யம் - Vedharanyam

கோட்டூரில் குளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் பலி

கோட்டூரில் குளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் பலி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரபீக், ரம்ஜான் பேகம் இவர்களின் மகன் ராசீத் (வயது 7). அதே பகுதியை சேர்ந்தவர் நவுசாத் அலி, நஜீலா பேகம் இவர்களின் மகன் முகம்மது நபீஷ் (வயது 6). ரம்ஜான் பேகம் மற்றும் நஜீலா பேகம் இருவரும் உடன்பிறந்த அக்கா தங்கை ஆவர். இருவருடைய கணவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இரண்டு குழந்தைகளும் சைக்கிள் ஒட்டி விளையாடி உள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள அய்யனார் குளத்தில் இறங்கியதாக தெரிகிறது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சைக்கிள் ஓட்டி விளையாடிய குழந்தைகளை காணவில்லை ஆனால் சைக்கிள் மட்டும் குளத்தின் கரையில் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து குளத்தில் இறங்கி தேடி உள்ளனர். அப்போது நீரில் மூழ்கி மயக்கமான நிலையில் இரண்டு குழந்தைகளையும் மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
May 16, 2024, 16:05 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

நாகை மாவட்ட கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது

May 16, 2024, 16:05 IST
நாகை மாவட்ட கடல் எல்லையில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடலில் மூழ்கி பிடிக்கும் பணியில் ஈடுபட்ட 14 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படை கைது செய்தது காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற ரோந்து கப்பல் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது அப்போது கோடியக் கரைக்கு தென் கிழக்கே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகுகளில் இருந்த 14 இலங்கை மீது உள்ள கைது செய்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர் கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்களும் முழுமையான விசாரணைக்கு பின்னர் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சாரிடம் ஒப்படைக்கப்பட்டு வேதாரணியத்துக்கு வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இலங்கை பருத்தித் துறையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது வேதாரணியம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாஸ்போர்ட் ஆக்ட் மற்றும் ஃபாரினர்ஸ் ஆக்ட் ஆகிய பிரிவுகளின் பில் வழக்கு பதிவு செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்