வேதாரணியத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 100 நாள் நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 100 நாள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவும், விவசாய தொழிலாளர் அனைவருக்கும் 100 நாள் வேலை கொடுக்கவும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், ஒரு நாள் ஊதியத்தை 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலை நிதியை மற்ற பணிகளுக்கு மாற்றக்கூடாது எனவும் அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக 100 நாள் வேலை திட்டத்தை தொடங்க வேண்டும் என கண்டன கோஷமிட்டனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு நாராயணன், ஒன்றிய செயலாளர் பாலகுரு, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என கண்டனம் முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி