
வேதாரண்யம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதிரடி ஆய்வு
வேதாரண்யம் வட்டம் வாய்மேடு கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று மருத்துவ சேவை விவரம் குறித்தும், கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் தொழிற்நுட்ப ஆய்வு கூடத்தினையும், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அகஸ்தியன்பள்ளி பகுதியில் வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.