மேலூர் - Melur

புதிய சமுதாய கூடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ.

புதிய சமுதாய கூடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டூர் ஊராட்சியில் 21 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூட கட்டிடத்தை எம். எல். ஏ பெரியபுள்ளான் நேற்று திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டூர் ஊராட்சியில் உள்ள பெருமாள் நகர் முத்திரையர் தெருவில் மேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சமும், கொட்டாம்பட்டி பொது நிதியில் ரூபாய் 6 லட்சமும் மொத்தம் 21 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூட கட்டிடத்தை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் எம். எல். ஏ கா. தமிழரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி யூனியன்சேர்மன் வளர்மதி குணசேகரன், கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், உலகநாதன், பட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் தொட்டிச்சி சங்கிலி, துணைத் தலைவர் மாலதி சசிகுமார், வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా