
மேலூர்: மாணவர்களுக்கு நோட் புக்ஸ் வழங்கிய எம்எல்ஏ
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் தினத்தையொட்டி அழகர்கோவில் கோட்டைவாசல் முன்பும், அ. வலையபட்டி ஊராட்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் பொதுமக்களுக்கு இன்று (பிப். 24) இனிப்பு வழங்கினார். மேலும் எம். எல். ஏ பெரியபுள்ளான் அழகர்கோவில் சுந்தரராசா உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் 110 மாணவ மாணவிகளுக்கும் மற்றும் அன்பு இல்லம் மாணவிகளுக்கும் எழுதுபொருட்களான நோட்டு, புத்தகம், பேனா, ரப்பர், பென்சில் வழங்கினார். 450 பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். உடன் மேலூர் வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏ. கே. வெள்ளைச்சாமி, அழகர்கோவில் கிளைகழக செயலாளர்கள் மருதுபாண்டி, ஆயத்தம்பட்டி செல்லம், வலையபட்டி ஊராட்சி செயலாளர் அடைக்கன், மற்றும் ஏ. அடைக்கன், சுந்தர், தனராஜ், ராஜேந்திரன், சின்னதம்பி, சிவசாமி, பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் மற்றும் அழகர்கோவில், அ. வலையபட்டி, கோட்டைவாசல், கோணவராயன்பட்டி, கோபுரக்குன்று, ஆயத்தம்பட்டி கிளைகழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.