வால்பாறை - Valparai

போதை மாத்திரை, கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

போதை மாத்திரை, கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் NP இட்டேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி நேற்று (செப்.,18) சோதனை செய்தனர். அப்போது சோதனையில் 500 கிராம் கஞ்சா இரண்டு கிராம் போதை மாத்திரை இருப்பது தெரிய வந்தது. உடனே அந்த வேனில் இருந்த நவ்ஷாத் சபிக் (35), குனியமுத்தூர் காந்திநகரை சேர்ந்த பசீர் அகமது (36), உக்கடம் லாரி பேட்டை அண்ணாநகரை சேர்ந்த ஜாஃபர் சாதிக் (35) ஆகிய மூன்று பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று செல் போன் வேணும் கஞ்சா போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் என்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்