ஆன்லைன் டிரேடிங்: பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.13 லட்சம் மோசடி
கோவை மாநகர ஆயுதப்படை 4வது பட்டாலியனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளவர் சந்திரா. இவரிடம் கோவையை சேர்ந்த சுந்தரம் உட்பட 3 பேர் நாங்கள் நடத்தி வரும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிகமால லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். அவர்களது ஆசை வார்த்தையை நம்பிய சந்திரா ஆன்லைன் டிரேடிங்கில் வெவ்வேறு கட்டங்களாக ரூ. 13 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அவர்கள் சொன்னபடி லாபம் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்க வில்லை. பல முறை கேட்டும் தட்டி கழித்து வந்தனர். இது குறித்து சந்திரா குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சுந்தரம், விஜயராகவன், ராஜ்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.