திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

காரில் குட்கா கடத்தல்: மூன்று பேர் கைது

காரில் குட்கா கடத்தல்: மூன்று பேர் கைது

திருவள்ளூர் தாலுக்கா போலீசார் திருவள்ளுர் அடுத்த பட்டறை பெருமந்தூர் சுங்கச்சாவடி அருகே சம்பவதினத்தன்று வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசார் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, கூல்லிப் ஆகியன மூட்டை மூட்டையாக இருந்ததை கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து காரில் இருந்தவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவள்ளூர் அடுத்த உளுந்தை முதுகூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (52), இன்பராஜ் (25), திரவியக்குமார் (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் கடத்தலுக்கு பயன் படுத்திய காரையும் அதில் இருந்த 1 1/2 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా