நகராட்சி வரி வசூல் வேட்டைஎன்ற பெயரில் அடாவடி.....

74பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபார கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் நகராட்சிக்கு சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தொழில் வரி செலுத்தாத பட்சத்தில் நகராட்சியில் இருந்து வரி வசூலிப்பாளர்கள் நேரடியாக சென்று வசூல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது பேருந்து நிறுத்தம் அருகில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்த மான இடத்தில் தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. வாடகை சொத்து வரி ஆகியவற்றை கோவில் நிர்வாகத்திடமும் தொழில் வரியை நகராட்சியிலும் செலுத்தி வருகின்றனர். நேற்று காலை திடீரென சாத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் ஏற்றும் வாகனத்தில் ஜப்தி வாகனம் என்னும் சிறு அறிவிப்பு பதாகையுடன் இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தின் வாசலில் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டதை கண்டு இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 18. 03. 2025 ரசீதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சீட்டையும் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. வரி வசூல் செய்வதற்கு இது போன்று கழிவுநீர் வாகனத்தை கடைக்கு முன்பாக இடையூறாக நிறுத்தி வைத்து நகராட்சி நிர்வாகம் அடாவடி செய்து வருவது வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி