கிராம சபை கூட்டத்தின் தேதி மாற்றம்

61பார்த்தது
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான 23. 03. 2025 - அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் - கலைஞர் கனவு இல்ல திட்டங்களின் பயனாளிகள் தேர்வு மற்றும் திட்ட பணிகளை இறுதி செய்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஓத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது 29. 03. 2025 - அன்று நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. • நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல்.
• நீhநிலைகளின் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல்.
சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி,
தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல
(பிரிதி மாதம் 5 - ம் தேதி மற்றும் 20 - ம் தேதி).

• தினமும் தகுந்த அளவு குடிளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்.

• இதர பொருட்கள் குறித்து விவாதித்தல்.

எனவே, 29. 03. 2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி