இராஜபாளையம்: லாட்டரி விற்பனை. முதியவர் கைது...

72பார்த்தது
இராஜபாளையம் அருகே மாநில லாட்டரி விற்பனை செய்த 71 வயது முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அடுத்த திருவள்ளுவர் தெருவிலுள்ள மாரியம்மன் கோயில் முன்பாக முதியவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் பெரிய கடை பஜார் பகுதியை சேர்ந்த 71 வயதுடைய முதியவர் பெருமாள் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரியவந்தன. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி