இராஜபாளையம்: வாகன விபத்தில் போலீஸார் உள்பட இருவர் காயம்...

79பார்த்தது
இராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல். சப் - இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 50), இவர் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பணியை முடித்து விட்டு தளவாய்புரத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில்
சென்று கொண்டு இருந்தார். அப்போது ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் புத்தூரை சேர்ந்த முருகன் (43) என்பவரும் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தார். அப்போது இருவரின்
மோட்டார்சைக்கிள்களும் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தனசேகரன், முருகன் ஆகிய 2பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் தனசேகரன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், முருகன் நெல்லை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி