இராஜபாளையம்: பலத்த கனமழையால் சாலையில் வெள்ள பெருக்கு...

78பார்த்தது
ராஜபாளையத்தில்கொட்டி தீர்த்த கனமழை. விவசாயிகள், பொதுமக்கள்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின்
கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர் இதனிடையே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வழக கம்போல், நேற்று காலை வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென மேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் ராஜபாளையம் நகர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைபகுதி தளவாய்புரம், சேத்தூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த ஒரு மாதகாலமாக மழையின்றி, வெயிலில் கடும் அவதியடைந்து வந்த பொது
மக்கள் மற்றும் விவசாயிகள், கொட்டி தீர்த்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி