சீனாவில் விவாகரத்து வழக்கில் தான் செய்த வீட்டு வேலைகளுக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கேட்ட ஹு என்ற பெண்ணின் கோரிக்கையை ஏற்று, அந்த பணத்தை 5 மடங்கு அதிகமாக கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணத்திற்கு பின் கணவரின் குடும்பத்திற்காக ஹு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு, தனது குழந்தை உட்பட வீட்டில் உள்ள அனைவரையும் நன்றாக பராமரித்துள்ளார். வீட்டு வேலை என்பது கணவன் - மனைவி இருவருக்கும் பொதுவானது. ஆனால் மதிப்பற்றது அல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது.