வேலூர்: பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணி மேற்கொண்ட பணியாளர்கள்!

65பார்த்தது
வேலூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட வேலப்பாடி பகுதியில் செல்லும் நிக்கல்சன் கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்க்கும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெறும் கை, கால்களால் கழிவு நீரில் நின்றவாறு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்ட போது, அனைத்து தூய்மை பணியாளருக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஏன் இவ்வாறு ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

தொடர்புடைய செய்தி