நடுக்கடலில் மூழ்கிய படகு.. காப்பாற்றிய மீனவர்கள்

81பார்த்தது
நடுக்கடலில் மூழ்கிய படகு.. காப்பாற்றிய மீனவர்கள்
கன்னியாகுமரி கடல் பகுதியில் விசைப்படகு ஒன்றின் அடிப்பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் கடல் நீர் படகுக்குள் புகுந்ததால் படிப்படியாக குடை சாய்ந்து மூழ்கும் தருவாயை எட்டியது. திக் திக் என ஒவ்வொரு நொடியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு படகில் இருந்த மீனவர்கள் எப்படி தப்பிப்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த மற்ற மீனவர்கள் தங்கள் படகுகள் மூலம் 20 மீனவர்களையும் பத்திரமாக காப்பாற்றினர்.

தொடர்புடைய செய்தி