மக்கள் தொகையை கட்டுப்படுத்தாததால் வடமாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. தென்மாநிலங்கள் கொடுக்கும் வரிப்பணத்தின் மூலம் வடமாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், நாம் கொடுக்கும் வரிப்பணத்தை கொண்டும் வடமாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் அலட்சியமாக இருந்து விட்டார்கள். இந்த சூழலில் மக்கள் தொகையை மட்டும் வைத்து மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாடு அதன் உரிமையை இழக்கும் அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார்.