சோழிங்கர் - Sozhingar

மாமியாரின் கையில் கத்தியால் வெட்டிய மருமகள் கைது

மாமியாரின் கையில் கத்தியால் வெட்டிய மருமகள் கைது

ஓச்சேரி அருகே கரிவேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (30). இந்தத் தம்பதியினருக்கு 13 வயதில் ஆண் குழந்தை, 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்தநிலையில், புருஷோத்தமனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தால் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையொட்டி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் தம்பதியினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசம் அடைந்த புருஷோத்தமன், கட்டையால் மனைவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக ஜெகதீஸ்வரி அவளூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் புருஷோத்தமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். புருஷோத்தமனின் தாய் கொள்ளாபுரி(63) வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். மருமகள் ஜெகதீஸ்வரி அங்கு வந்துள்ளார். அப்போது மாமியார், மருமகளுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதில் ஆவேசம் அடைந்த ஜெகதீஸ்வரி, தனது மாமியாரை காய் நறுக்கும் கத்தியால் கழுத்து மற்றும் கையில் அறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்தகாயமடைந்த அவரை மீட்டு, வாலாஜா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் ஜெகதீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా