செங்கம் - Chengam

தி.மலை: மின் ஊழியா்கள் மாநிலம் தழுவிய போராட்டம்

தி.மலை: மின் ஊழியா்கள் மாநிலம் தழுவிய போராட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் தர்னா போராட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருவண்ணாமலை கிழக்கு கோட்ட சிஐடியு தலைவர் அருள்தாஸ் தலைமை வகித்தார். சிஐடியு கோட்டச் செயலர் செந்தில், திருவண்ணாமலை மண்டலச் செயலர் சிவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.கூட்டத்தில், தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள ஆரம்பக் கட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். எண்ம மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (பிப். 25) நடைபெறும் தர்னா போராட்டத்தில் திரளானோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இதில், கோட்ட துணைச் செயலர் பாவேந்தன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை