
சிறுகமணி: வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தர்மபுரி விவசாயிகள் பட்டறிவு பயணம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தின் அரூர் பென்னாகரம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நீர்வழிப் பகுதி மேம்பாட்டு முகமையின் சுணைநீர் வடிப்பகுதி திட்டத்தின் கீழ் நான்கு குழுக்களாக சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தை பார்வையிட்டனர். விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செயல்பட்டு வரும் மாதிரி செயல் விளக்கத் திடல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.