காட்டுப்புத்தூர்: மழைநீரில் மூழ்கிய கோரைபுல் விவசாயி வேதனை

61பார்த்தது
காட்டுப்புத்தூர் அருகே தவிட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 4 ஏக்கர் கோரை புல் மழை வெள்ள நீரில் மூழ்கியதில் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள கோரை சேதம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகே சின்னபள்ளிபாளையத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும் மற்றும் வங்கிகளில் கடன் பெற்றும் கோரைபுல் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன் தினம் கோரைகளை அறுத்து வயல்வெளி பகுதிகளில் காய வைத்துள்ளார், நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக காய வைத்திருந்த கோரை புல் மழை வெள்ள நீரில் மூழ்கி சுமார் 4 லட்சம் மதிப்பிலான கோரை புல் சேதம் ஆனது. சுமார் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் மூழ்கி இருப்பதால் கோரைப்புல் மூழ்கிய தண்ணீரில் அழுகி வீணானதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார், விவசாயி சக்திவேல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ரூபாய் 4 லட்சம் சேதமடைந்ததுள்ளது எவ்வாறு வாழ்வாதாரத்தை மேம்படுத்த போகிறோம் என தெரியவில்லை.
தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி