திருச்சியில் கேப்டனின் நினைவு தினம் அனுசரிப்பு

80பார்த்தது
திருச்சியில் கேப்டனின் நினைவு தினம் அனுசரிப்பு
கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சின்னமிளகுபாறையை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் "பர்னாபாஸ்" அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கேப்டனின் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. 

மிளகுபாறை CMP சுரேஷ், R.D. ராஜேஷ், வினோத், மகாலிங்கம், வெங்கடேசன், மோகன், விக்கி, கோபால், சரவணன், வள்ளி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னதாக சின்னமிளகுபாறை பகுதியை சேர்ந்த கேப்டனின் விசுவாசிகள் அவரது திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய அன்னதானமும் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி