மணச்சநல்லூர் - Manachanallur

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை

மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி காமன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி(வயது 59). நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கால் விரல்கள் மற்றும் பாதத்தின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. அதனால் ஏற்பட்ட வலியின் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேலையில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று துவரங்குறிச்சி போலீசார் பாரதியின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా