பயிர் காப்பீட்டுத் தொகையில் ஏமாற்றம்.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
பயிர் காப்பீட்டுத் தொகையில் ஏமாற்றம்.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் 2023 - 24ம் நிதியாண்டுக்கான சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை அண்மையில் விடுவிக்கப்பட்டது. அதன்படி 72 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.18) 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி