“சங்பரிவார் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்" - கேரள முதல்வர்

75பார்த்தது
“சங்பரிவார் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்" - கேரள முதல்வர்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அமைச்சரவை ஒப்புதல் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியாகும். குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிக்கும் சங்பரிவார் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும். நமது ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி