மணச்சநல்லூர் - Manachanallur

கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து

கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கூத்தூரை சேர்ந்தவர் சரவணன் இவர் இனம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூலாங்குளத்துப்பட்டி பகுதியில் தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இவருடைய கார் மீது பலமாக மோதியதில் காரின் உள் அமர்ந்திருந்த சரவணனுக்கு காலில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்த புகார் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான ஸ்ரீரங்கம் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து இனாம்குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా