

மன்னார்குடியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகர செயலாளர் தாயுமானவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 50 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சமையல் எரிவாயு சிலிண்டருடன் வந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.