திருத்துறைப்பூண்டி - Thiruthuraipoondi

தமிழக சுகாதாரத் துறையை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக சுகாதாரத் துறையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட கொய்யா தோப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். கோறையாற்றில் சாக்கடை கலக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் பணி மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை நகர தலைவர் ராஜ்முகமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி தொண்டர்கள் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக சுகாதாரத் துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


திருவாரூர்
Sep 06, 2024, 01:09 IST/மன்னார்குடி
மன்னார்குடி

ரசாயன கலவையில் தயாரிக்கப்பட்ட 75 விநாயகர் சிலைகளுக்கு சீல்

Sep 06, 2024, 01:09 IST
மன்னார்குடியில் ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது உறுதியானதால் 75 விநாயகர் சிலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விநாயகர் சதுர்த்தி நாளை(செப்.7) கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முறைமடைந்து உள்ளது. அதேபோல இரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்து தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த இடத்தில் நேற்று முன்தினம்(செப்.4) மாற்ற சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சிலைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று(செப்.5) விநாயகர் சிலைக்கு சிலை தயாரிக்கும் இடத்திற்கு சென்ற மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்ட் அஸ்வத் ஆண்டோ, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா சப் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளில் 75 சிலைகள் ரசாயன கலவைகொண்டு தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் சிலைகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து சீல் வைத்தனர்.