மயிலாடு துறை - Mayiladuthurai

சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று ஜூலை 22 திங்கட்கிழமை காலை 11: 30 மணிக்கு நடைபெற்றது: - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் (சிஐடியு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் ஜேசுதாஸ் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தொடர்ந்து தமிழக ஊராட்சிகளில் பணி செய்து வரும் OHT ஆப்ரேட்டர் , தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் , டி பி சி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் OHT ஆப்ரேட்டர்களுக்கு இன்சூரன்ஸ் பிடித்தம் செய்வதை உறுதிப்படுத்தி சுய உதவி குழுக்கள் மூலம் ஊதியம் வழங்குவதை தவிர்த்து வங்கிக் கணக்கில் நேரடியாக ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
புதிய கட்டிடம் கட்டப்படுமா?
Jul 23, 2024, 00:07 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

புதிய கட்டிடம் கட்டப்படுமா?

Jul 23, 2024, 00:07 IST
நாகை மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஏர்வாடி பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்த கட்டிடம் சுமார் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 500 வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ள இந்த கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம் எந்தவித பராமரிப்பும் இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் மேற்கூரை, சுவர்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது. இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் கடந்த சில மாதங்களாக அலுவலகத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.