![](https://media.getlokalapp.com/cache/91/8e/918ed39a02800ebcd667119e7a69c77b.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று ஜூலை 22 திங்கட்கிழமை காலை 11: 30 மணிக்கு நடைபெற்றது: - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் (சிஐடியு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் ஜேசுதாஸ் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தொடர்ந்து தமிழக ஊராட்சிகளில் பணி செய்து வரும் OHT ஆப்ரேட்டர் , தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் , டி பி சி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் OHT ஆப்ரேட்டர்களுக்கு இன்சூரன்ஸ் பிடித்தம் செய்வதை உறுதிப்படுத்தி சுய உதவி குழுக்கள் மூலம் ஊதியம் வழங்குவதை தவிர்த்து வங்கிக் கணக்கில் நேரடியாக ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.