விடுமுறை முடிந்து செல்லும் பயணிகள் அவதி

52பார்த்தது
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு வந்த மக்கள் தங்கள் பணிக்கு திரும்பிச் செல்ல சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சரிவர பேருந்து இல்லாத காரணத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மயிலாடுதுறையில் நேற்று பேருந்து நிலையத்தில் மக்கள் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்ல பேருந்து இல்லாமல் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த சூழல் உருவாகியது. இதனால் தாங்கள் பணிக்கு செல்வோமா இல்லையோ என்ற அச்சத்துடனே பேருந்து நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்தனர். மேலும் விடுமுறை முடிந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி