மயிலாடுதுறை: 750 குவிண்டால் பருத்தி கொள்முதல்

65பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாகப்பட்டினம் விற்பனை குழு மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பருத்தி கொள்முதல் நடைபெற்றது. சுமார் 750 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. ரூ. 8, 209 அதிகபட்ச விலையாகவும், ரூ. 6, 669 குறைந்தபட்ச விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்றது. இதில் பருத்தி விவசாயிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி