வெள்ளையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடை அடைப்பு

67பார்த்தது
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் வெள்ளையன் நேற்று (செ.ப் 10) இயற்கை எய்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரில் உள்ள பெரிய கடை வீதி சின்ன கடை வீதி, கூறைநாடு ரயிலடி கடைத்தெரு, லாகடம் மார்க்கெட் பகுதி, கண்ணாரத்தெரு கடை வீதி உள்ளிட்ட அனைத்து கடைவீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மலர் வணிகம் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதுபோல் சீர்காழி செம்பனார்கோயில் , மங்கைநல்லூர் குத்தாலம், மணல்மேடு பொறையார் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இன்று (செ.ப் 11) பிற்பகல் 12 மணி வரை கடைகளை அடைத்து மறைந்த வெள்ளையனுக்கு வியாபாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். பல்வேறு பகுதிகளில் மறைந்த வெள்ளையனின் திருவுருவப்படம் தாங்கிய பேனர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி