அம்பத்தூர் - Ambattur

திருவள்ளூர்: ரயிலில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு; இரண்டு பேர் கைது

திருவள்ளூர்: ரயிலில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு; இரண்டு பேர் கைது

சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணித்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு, ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில். ரயிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையில் 2 பேர் கைது.  திருவள்ளூர் அடுத்த புட்லூர் உள்ளாசம் நகரைச் சேர்ந்தவர் சாந்தி, (55). இவர், சென்னையில் இருந்து அண்ணாநூர் வழியாக திருவள்ளூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலில், கதவருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார். அண்ணாநூரில் ரயில் நின்றபோது, மர்மநபர் ஒருவர், சாந்தியின் மொபைல் போனை பறித்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, அவரை பிடிக்க முயன்றபோது, மர்ம நபர் தள்ளிவிட்டதால் ரயிலில் இருந்து நடைபாதையில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். பலத்த காயமடைந்த சாந்தி கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து விசாரித்த ஆவடி இரயில்வே போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட திருநெல்வேலி, கெங்குரெட்டிகுப்பத்தைச் சேர்ந்த ராகுல், (25) மற்றும் அவரிடம் திருட்டுப் போனை வாங்கிய பெரம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், (39)  ஆகியோரை கைது செய்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా