சோழவந்தான் - Cholavanthaan

திமுக இளைஞரணி சார்பாக வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக பேரூர் கழகம் மற்றும் இளைஞரணி சார்பில் மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. வடமாடு மஞ்சு விரட்டு போட்டியில் முதலாவதாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் காளை களமிறங்கியது. பின்னர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகளும், ஓர் அணிக்கு 9 பேர் கொண்ட காளையர்களும் களமிறங்கினர். சில காளைகள், பிடிக்க வந்த வீரர்களை தூக்கி வீசியதுடன் துள்ளி விளையாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வீரர்களும் அயராமல் போராடி பரிசுகளை பெற்று சென்றனர். இப்போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా