தென்காசி: ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

73பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் அமலைசெடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. மேலும் கூத்தாடி குளம், பாறைகுளங்களுக்கு நிறைந்து அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை செழிப்படைய செய்கிறது. 

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாறைகுளம் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. அதேநேரத்தில் குளத்தில் ஆங்காங்கே அமலைசெடிகள் வளர்ந்து தண்ணீரை மாசுபடுத்துகின்றன. இதனால் போதிய தண்ணீர் வருவது பாதிக்கிறது. இதன் காரணமாக பல விவசாயி நிலங்களுக்கு நீர்வரத்து இன்றி பாசனம் தடைபடுகிறது. எனவே, அமலைசெடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி