திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27). திருமணமான மணிகண்டன் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனை கைவிடுமாறு கூறியுள்ளனர். இதனால், கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு தேனி மாவட்டம் குன்னூருக்கு சென்ற மணிகண்டன், போடிநாயக்கனூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயிலில் விழுந்து கள்ளகாதலியுடன் தற்கொலை செய்துகொண்டார். இருவரது உடல்களும் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.